×

எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் விளையாட்டு திடல் சீரமைப்பு பணி தொடர்பாக எம்பி, எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்குட்பட்ட எண்ணூர், அன்னை சிவகாமி நகரில் விளையாட்டு மைதானம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தை சீரமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.பி.சங்கர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் இந்த மைதானம் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விளையாட்டு மைதானத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்து, சீரமைத்து உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் தமிழரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்பேரில், கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மாநகராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி சிவகுருபிரபாகரன், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர் தமிழரசன் ஆகியோர் இந்த விளையாட்டு மைதானத்தை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்து இருந்த ரயில்வேத்துறை அதிகாரியிடம் ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை மாநகராட்சியிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ரயில்வே துறை நிலத்தை மாநகராட்சி ஒப்படைக்க முறையான ஆவண நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன், திமுக அமைப்பாளர்கள் மதன்குமார், தியாகராஜன், துணை அமைப்பாளர் அமிர்தராஜ் மற்றும் கிராம நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பர்மா நகரில் ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு குளங்களையும் எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.

The post எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் விளையாட்டு திடல் சீரமைப்பு பணி தொடர்பாக எம்பி, எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Annai Sivagami Nagar, Ennore ,Thiruvotiyur ,Annai Sivakami Nagar ,Ennore ,Thiruvotiyur Mandal 3rd Ward ,Sivagami Nagar ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை